கருவாடில் குழம்பு வைத்தால் வீடே மணக்கும். பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் இந்த குழம்பை வீட்டில் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
கருவாடு - 1/2 கிலோ
சின்ன வெக்காயம் - 30
தக்காளி - 2 பெரியது
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் கருவாடை வெதுவதுப்பான நீரில் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கப்படாத சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து லேசாக வதக்கிக் ஆறவிட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.
இப்போது வதக்க்கிய பூண்டு, சின்ன வெங்காயத்தினை மிக்ஸியில் போட்டு, மிளகாய் தூள் சேர்த்து அரைக்க வேண்டும். அவ்விழுதினை புளித்தண்ணீருடன் சேர்க்கவும்.
பின் உப்பு சேர்த்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
இப்போது கடுகு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றினை கடாயில் நன்கு வதக்கி கிளறி விடவேண்டும். பூண்டு வெந்ததும் நறுக்கப்பட்ட சின்ன வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் தக்காளியைச் சேர்க்கவும்.
மேலும் படிக்க... சண்டே கருவாட்டு குழம்பு வைச்சு சாப்புடுங்கள்.. அருமையாக இருக்கும்...
தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விடவேண்டும்.அத்துடன் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். இப்போது புளிக்கரைசல் மற்றும் விழுது கலவையை ஊற்றவும். 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும். நன்கு கொதித்ததும், கருவாடுகளை போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை வேக வைத்தால் போதுமானது. இப்போது மணக்க மணக்க காரசாரமான சுவையான கருவாட்டு குழம்பு ரெடி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.