விநாயகர் சதுர்த்திக்கு வாங்கிய பொரி கட்டாயமாக சில பேர் வீடுகளில் மிஞ்சியிருக்கும். மிஞ்சிய பொரி நமுத்து போயிருந்தால் கூட பரவாயில்லை. அந்த பொறியை வைத்து சூப்பரான மொறு மொறு காரப்பொரியை செய்து விடலாம்... இதை குழந்தைகள் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்... வாங்க எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்
அரசிப்பொரி - 1லிட்டர்
நிலக்கடலைப்பருப்பு - 1/2கப்
பொட்டுக்கடலை - 1/2கப்
முந்திரிப் பருப்பு - 10
கருவேப்பிலை
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் - 4ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வறுத்துக்கொண்டு, அதன்பின் அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வறுத்த பின்னர், அடுப்பை அணைத்து விட்டு பொரி, உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். இப்போது காரப்பொறரி ரெடி... பரிமாறும் போது அதன்மேல் கேரட் துருவல், வெங்காயம் பொடியாக நறுக்கியதைை தூவிவிட்டு பரிமாறினால் சுவை மிகுதியாக இருக்கும்...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.