ரவையில் இட்லியா..? என தயக்கத்துடன் கேட்கும் நீங்கள் இதை ஒரு முறை டிரை பண்ணி பாருங்க.. அதன் பிறகு இட்லி என்றாலே அது ரவையில்தான் செய்ய வேண்டும் என சொல்வீர்கள். அந்த அளவிற்கு அதன் சுவையும் ஆரோக்கியமும் இருக்கும். குழந்தைகளுக்கும் இதை தராளமாக கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்
தயிர் - 1/2 கப்
கேர்ட் , பீன்ஸ் மற்றும் பட்டாணி - 1/4 கப்
எண்ணெய் - 1 tbsp
கடுகு - 1 tbsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஈனோ ஃபுரூட் சால்ட் - 1 tsp
தண்ணீர் - 1 கப்
செய்முறை :
முதலில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கியதும் ரவையை சேர்த்து அடிப்பிடிக்காதவாறு கிளறுங்கள். 2 நிமிடங்கள் கிளறியதும் தயிர் சேர்த்து கிளறிவிட்டு இறக்கிவிடுங்கள்.
பின் அதில் தேவையான அளவு உப்பு, காய்கறிகள், ஈனோ உப்பு சேர்த்து கலந்துவிடுங்கள்.
அடுத்ததாக தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துவிட்டால் மாவு தயார்.
இப்போது இட்லி குக்கரை எடுத்து அதன் தட்டுக் குழிகளில் எண்ணெய் தடவி ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி குக்கரில் வையுங்கள்.
10 நிமிடங்கள் வரை வேக வையுங்கள். பின் திறந்து பாருங்கள். அருமையான சுவையில் இட்லி மல்லிப்பூ போன்று வெந்திருக்கும்.
அதை அப்படியே பதமாக எடுத்து ஹாட் பாக்ஸில் போட்டு வையுங்கள். இதற்கு பொருத்தமாக தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து சுட சுட சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.