பலருக்கு காய்கறி என்றாலே பிடிக்காது... ஆனால் காய்கறியில் அல்வா போன்ற இனிப்பு பண்டங்களை செய்து சாப்பிட்டாலே ருசியாகதான் இருக்கும் . ஏனென்றால் காய்கறியில் உள்ள சுவையும் அத்துடன் சேரும் இனிப்பின் சுவையும் சேர்ந்து ஒரு அட்டகாசமான ஒரு இனிப்பு பலகாரத்தை தரும்... அந்த வகையில் இன்று பூசணிக்காயில் அல்வா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொளவோம் வாங்க...
நிறைய வெரைட்டியில் அல்வா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உடல் எடையை குறைக்க உதவும் பூசணிக்காயை வைத்து வைத்து சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் - 300 கிராம்
பால் - 500 மி.லிட்டர்
சர்க்கரை - 400 கிராம்
முந்திரி - 15
திராட்சை - 15
பாதாம் - 15
நெய் - 250 கிராம்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - அரை ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
பூசணிக்காயை தோல் நீக்கி நன்றாகத் துருவி, அதன் சாறைப் பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும். சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும். பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் சேர்த்து கொண்டே இருக்கவும். அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு, பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும். கடைசியாக அல்வா பதம் வந்தவுடன் ஏலக்காய்த் தூள், வறுத்த திராட்சை, முந்திரி, பொடித்த பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும். நாவூறும் சூடான சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.