மாலை நேரத்தில் மழைக்கு இதமாக சூடாக டீ குடிக்கும்போது அதற்கு பொருத்தமான வகையில் பக்கோடா சாப்பிட்டால் எத்தனை சுவையாக இருக்கும்..நினைத்துப் பார்த்தால் போதுமா சமைத்து அந்த சுவையின் இன்பத்தில் நனையுங்கள்...! எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - 2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் 2
இஞ்சி - 1 துண்டு
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் பொடி - 1/2 tsp
உப்பு - 1 tsp
மிளகாய் தூள் - 1 tsp
தனியா பொடி - 1 tsp
பெருங்காயத்தூள் - 1/2 tsp
தண்ணீர்
எண்ணெய் - வறுக்க
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் அளவு மாறாமல் கலந்துகொள்ளுங்கள்.
இறுதியாக தண்ணீர் போதுமான அளவு சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய வையுங்கள். சூடேறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள்.
அவ்வளவுதான் ஆனியன் ஓட்ஸ் பகோடா தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.