இனிப்பு வகைகளில் ஜிலேபி என்றால் நம் அனைவருக்கும் ரொம்பவே பிடிக்கும். வாயில் போட்டாலே மிருதுவாக தேன் சுவை போல் இருக்கும். அப்படி 5 நிமிடத்திலேயே வீட்டிலிருந்து சுவையான ஜிலேபியை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
புளித்த இட்லி மாவு - ஒரு கப்
கேசரி பவுடர் - 1/2 ஸ்பூன்
மைதா மாவு - 1
எண்ணெய் தேவையான அளவு
பாகு தயாரிக்க
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1 கப்
எலுமிச்சை - 1/2
செய்முறை
1. முதலில் 2 அல்லது 3 நாள் ஆட்டி நன்கு புளித்த அரிசி மாவு வேண்டும். அதில் கேசரி பவுடரை நிறத்திற்காக சேர்த்துக் கொள்ளவும்.
2. அதன்பின் அதில் மைதாமாவு சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கரைத்துக்கொள்ளவும். இதற்கிடையே பாகு தயாரிக்க தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட்டு கொதிக்க வையுங்கள்.
3. அதில் எலுமிச்சை சாறு பிழிந்துகொள்ளுங்கள். இப்போது பாகு ரெடி.
4. தற்போது கரைத்து வைத்துள்ள மாவை கோதுமை கவர் அல்லது ஏதேனும் பாக்கெட்ஸ் இருந்தால் அதில் மாவை ஊற்றி அதன் அடியில் சிறு துளையிட்டுக்கொள்ள வேண்டும்.
5. இது ஜிலேபியை முறுக்கலாக போட உதவும். தற்போது கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை இரண்டு சுத்து முறுக்கு போல் சுற்றி எடுங்க வேண்டும். பின் பொண்ணிறமாக வந்ததும் அப்படியே எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டுவிடுங்கள்.
6. இது பாகில் 5 நிமிடங்கள் ஊறினால் போதும். உடனே எடுத்து விடுங்கள். நீண்ட நேரம் ஊற விட்டால் ஜலேபியின் மொறுமொறுப்பு போய்விடும். அவ்வளவுதான் சுவையான ஜலேபி ரெடி....
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sweet recipes