மாலையில் வீட்டில் இருப்போருக்கு சூடாக தேங்காய் பால் கொழுக்கட்டை செஞ்சு கொடுங்க... அதற்கு முன் எப்படி செய்யலாம் என பார்த்துவிட்டு செல்லுங்கள்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
தேங்காய் - 1/4 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
நெய் - 3 ஸ்பூன்
செய்முறை :
அரிசி மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளுங்கள். பின் உருட்டிய மாவில் பாதியை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து மீதம் உள்ள மாவில் துருவிய தேங்காய், இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக கடாயில் வெல்லம் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பாகு செய்யுங்கள். வெல்லம் நன்கு உருகியதும் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
பின் மீண்டும் கடாயில் ஊற்றி உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பாகில் சேர்த்து கொதிக்க வையுங்கள். 5 நிமிடத்தில் உருண்டைகள் வெந்துவிடும்.
பின் பாதி எடுத்து வைத்துள்ள பிசைந்த அரிசி மாவை தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளுங்கள். அதை அப்படியே கொதிக்கும் வெல்லப் பாகில் ஊற்றிக் கிளறுங்கள்.
பின் ஏலக்காய் பொடி சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு நெய்யும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறு தீயில் 7 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். கெட்டி பதம் வரும் போது தேங்காய் பால் ஊற்றுங்கள்.
ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் தேங்காய் பால் கொழுக்கட்டை தயார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.