சம்பா கோதுமை ரவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. காலை உணவுக்கு சமைத்து சாப்பிட்டால் நிறைவாக இருக்கும். அதேபோல் இதை போர் அடிக்கும் உப்புமாவாக இல்லாமல் சுவையான காரக்கொழுக்கட்டை பக்குவத்தில் செய்து கொடுத்தால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடுவார்கள். மாலை வேலையில் நல்ல ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை ரவை - 1 1/4 கப்
தேங்காய் துருவியது - 1/3 கப்
கேரட் - 1
தண்ணீர் - 3 3/4 கப்
தாளிக்க :
எண்ணெய் - 2 tbsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 2 tsp
கடலை பருப்பு - 2 tsp
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
முதலில் தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்துக்கொள்ளுங்கள். பின் அதில் கேரட் சேர்த்து வதக்குங்கள். அதோடு தேங்காய் சேர்த்து வதக்குங்கள்.
அடுத்ததாக தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வையுங்கள்.
கொதித்ததும் சம்பா கோதுமையை சேர்த்து கிளறுங்கள்.
கட்டிகள் இல்லாமல் , அடிபிடிக்காமல் கிளறுங்கள். பின் அடுப்பை அணைத்துவிட்டு கொஞ்சம் சூடு ஆறியதும் உருண்டைகளாக கொழுக்கட்டைக்கு பிடித்துக்கொள்ளுங்கள்.
அவற்றை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்களுக்கு இட்லி குக்கரில் வேக வையுங்கள். அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை கொழுக்கட்டை தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.