குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும். இத்தகைய பாலக் கீரையுடன் சிக்கனை சேர்த்து சமைத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்...
தேவையான பொருட்கள்:
சிக்கன் - கால் கிலோ
பெரிய தக்காளி - ஒன்று
எண்ணெய் - ஒரு மேஜைக் கரண்டி
கெட்டி தயிர் - 200 கிராம்
பச்சை மிளகாய் - நான்கு
இஞ்சி, பூண்டு விழுது - 20 கிராம்
பாலக்கீரை - ஒரு கட்டு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
பாலக் கீரை சிக்கன்
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பாலக்கீரை, வெங்காயம், தக்காளி ஆகிய அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு லேசாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தையும் உடன் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பாலக் கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின்னர் சிக்கனை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இப்போது தயிரையும் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரம் மசாலா, உப்பு ஆகிய இவற்றையும் சேர்க்கவும். மேற்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்றாகவேக வைக்க வேண்டும். இதோ சுவையான சித்தூர் பாலக் சிக்கன் தயார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.