காலை உணவை சிம்பிளாக செய்து முடித்தால்தான் மதிய உணவையும் சீக்கிரம் செய்து முடிக்க முடியும். இல்லையெனில் நாள் முழுவதும் கிட்சனிலேயே இருப்பது போல் ஆகிவிடும். அந்த வகையில் பத்தே நிமிடத்தில் உங்கள் காலை உணவு வேலைகளை முடித்துவிட இந்த ரெசிபி உங்களுக்கு உதவலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் – 4
நல்ல எண்ணெய் – 4 tsp
உளுந்தம் பருப்பு – 1 tbsp
சீரகம் - 1/4 tsp
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 8
வெள்ளைப் பூண்டு – 1
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – ஒரு கொத்து
கறிவேப்பிலை – 1 கொத்து
தாளிக்க
நல்ல எண்ணெய் - 1/2 tsp
கடுகு - 1/2 tsp
மிளகாய் வற்றல் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை :
தேவையான அனைத்தையும் தயார் செய்துகொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி உளுந்து, சீரகம் சேர்த்து தாளியுங்கள்.
பின் பூண்டு , பச்சை மிளகாஉ, கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்தில் வதக்கிக்கொள்ளுங்கள்.
பின் தக்காளியை மசிய வதக்கிக்கொள்ளுங்கள். அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் ஆற வைத்து அதில் உப்பு சேர்த்து மிக்சியில் மைய அரைத்து கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அதில் தாள்ளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி கலந்துவிடுங்கள்.
அவ்வளவுதான் கத்தரிக்காய் வதக்கல் சட்னி தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.