Krishnagiri | கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மழை காரணமாக செடியிலேயே தக்காளிகள் அழுகி வருகின்றன. அதனால் அழுகிய தக்காளிகளை மீன்களுக்கு இறையாக ஏரியில் கொட்டும் விவசாயிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான அகரம், மருதேரி, பண்ணந்தூர், பனங்காட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த மாதங்களில் தக்காளி விளைச்சல் குறைவாக இருந்ததால் ஒரு கிலோ 100 ரூபாயை கடந்து விற்பனையானது. அதனால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி பயிரிட்டனர். இதன் பின் தக்காளி செடிக்கு ஏற்ற இதமான காலநிலை நிலவியதால் செடிகளில் தக்காளி நல்ல விளைச்சலை தந்தது.
தக்காளி வரத்து அதிகமானதால் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.5க்கு கூட வியாபாரிகள் வாங்க முன் வரவில்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது தொடர் மழை காரணமாகவும் தோட்டங்களில் மழை நீர் தேங்கி, தக்காளி செடிகள் அழுகி வருவதால் தக்காளிகளை பறிக்காமல் விவசாயிகள் அப்படியே விட்டு விட்டனர்.
இதனால் செடியிலேயே அழுகிய தக்காளிகளை அப்பகுதியில் உள்ள சில மீன் குத்தகை தாரர்கள் தங்களாகவே ஆட்களுக்கு கூலி கொடுத்து தக்காளியை பறித்து டிராக்டர் மூலம் கொண்டு வந்து ஏரியில் கொட்டி மீன்களுக்கு உணவாக்கி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.