கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே பி.பி. பாளையம் செல்லும் வழியில் ஒருவர் இறந்து கிடப்பதாக தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அங்கே, ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் கீழே விழுந்து கிடந்துள்ள நிலையில், அதற்கு அருகே 10 மீட்டர் தொலைவில் தலையில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இறந்தவரின் உடல் காணப்பட்டது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர் பி.பி. பாளையம் மதனகிரியப்பா மகன் நரசிம்மமூர்த்தி ( 42) என்றும் இவர் தளி ஒன்றியம் தாரவேந்திரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்ததாகவும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இவர், தளி பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு காய்கறி வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் வழிமறித்து, அவரின் தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர் என்பது தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர்.
சடலத்தை மீட்ட போலீசார், தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான குற்றவாளிகளை வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.
Must Read : இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திச்சென்ற கும்பல்... கும்பகோணத்தில் பரபரப்பு
தளி அருகே கட்டையால் தாக்கி பஞ்சாயத்து தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - செல்வா.
உங்கள் நகரத்திலிருந்து(கிருஷ்ணகிரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.