கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மலைக்கோயிலின் 15 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
திருவிழாவின் முதல் நாள் இரவு மலையில் இருந்து இறங்கி வந்த உற்சவ மூர்த்தி சந்திர சூடேஸ்வரர் மரகதாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக திருவிழா தொடங்குவதற்கு முன்பாக அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிநெடுக திரண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகள் களைகட்ட திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
செய்தியாளர்: செல்வா, ஓசூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Festival, Hosur, Local News, Temple