கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் மூலம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 45 பேர் ரயில்வே துறையில் வேலை வேண்டும் என்பதற்காக பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கரூரை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தென்னக இரயில்வேயின் தலைமை கணக்காளராக பணியாற்றி ஒய்வு பெற்றதாகவும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி மதுரை கோட்டத்தில் செக்சன் ஆபிசராக இரயில்வேயில் பணியாற்றி வருவதாகவும் கூறி அவர்களின் பொய்யான அடையாள அட்டையை காட்டியுள்ளனர்.
அத்துடன் தங்களுக்கு இரயில்வேயில் உள்ள மூத்த அதிகாரிகள் நன்கு பழக்கம் என்றும், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கருப்பண்ணன் மூலம் 45 பேருக்கு இரயில்வேயில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி நம்பவைந்து ரூ.2,07,00,000 (இரண்டு கோடியே ஏழு இலட்சம்) பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி உள்ளனர்.
பின்னர் அவர்கள் குறிப்பிட்ட நாட்களில் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி தராமலும், காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் கரூர் மாவட்ட குற்றவியல் பிரிவில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில் ஏற்கனவே ரெங்கநாதன் என்பவர் மீது தூத்துக்குடியை சேர்ந்த சுப்பையா என்பவர் கொடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்ட குற்றபிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பல நபர்களுக்கு வேயை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த வகையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளிவந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் செய்த விசாரணையில் கூட்டு சதியில் ஈடுபட்ட கரூர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, ரமேஷ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.