கேரளாவில் பயணிகள் உடன் சென்ற பேருந்து நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளத்தில் பெய்த கனமழையின் போது பெரிய மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இருந்து பேருந்து பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர். ஆலுவா-புராயர் சாலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. விபத்துக்கு சில நொடிகளுக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் அந்த பகுதியை கடந்து சென்றது.
பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெரிய காத்தாடி மரம் வேரோடு சாய்ந்தது. இதே போல இதற்கு முன், பள்ளி வாகனமும் அவ்வழியாக சென்றது. இந்த சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.