தனது வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்துக் கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தாயும், மகளும் தர்ணாவில் ஈடுபட்டனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு தலப்பள்ளிவிளையைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவர் தனது மகளுடன் நாகர்கோவிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த திடீர் தர்ணாவால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் நிர்மலா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் குழிக்கோடு பகுதியில் வசித்து வரும் நிலையில், அவர்களது வீட்டின் முன்புள்ள நிலத்தை அபகரித்து கொண்ட நபர் ஒருவர் தொடர்ந்து இவர்களை வீட்டிற்கு செல்ல விடாமல் வேலி அமைத்து தனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தாய்-மகள் கண்ணீர் மல்க கோரிக்கை
இது குறித்து, காவல்நிலையம், கிராம நிர்வாக அலுவலகங்களில் புகார் கொடுத்தும் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை, அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் எங்கள் நிலை உணர்ந்து உடனடியாக தீர்வு காண நடவடிக்கை வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
Must Read : வன்முறைகளை தூண்டும் வகையில் வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோ... தென்காசியில் இளைஞர் கைது
இந்த திடீர் தர்ணா சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர்கள் அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது காண்போரை கண் கலங்க வைத்தது.
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.