முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / உலகில் வேறெங்கும் காண முடியாத வினோத வழிபாடு.. சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் நடக்கும் சிவாலய ஓட்டம்...!

உலகில் வேறெங்கும் காண முடியாத வினோத வழிபாடு.. சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் நடக்கும் சிவாலய ஓட்டம்...!

சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம்

Kanniyakumari News : மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

உலகபுகழ் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் தொடங்கியது. இன்றும் நாளையுமாக நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். நாளை சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து, கையில் விசிறியோடு குமரி  மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்று சிவபிரானை தரிசிக்கிறார்கள். இங்குள்ள 12 சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே சிவாலய ஓட்டம் என கூறப்படுகிறது.

இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ. ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று விஷ்ணு நாமத்தை  உச்சரிக்கிறார்கள். ஹரியும், சிவனும் ஒண்ணு என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம். ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  இந்த 12 சிவாலயங்களில் மஹாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிவார்கள்.  அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள்.

சிவராத்திரிக்கு முன்தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்.  சிவராத்திரியை முன்னிட்டு நாளை குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையுமாக தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் உட்பட  லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சிவாலய தரிசனத்தில் பங்கேற்பார்கள்.

First published:

Tags: Kanniyakumari, Local News