தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பூ சந்தைகளில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையும் விளங்கி வருகிறது. தோவாளை பூ சந்தையில் இருந்து கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகிறது. பண்டிகை காலங்கள் என்றால் பூச்சந்தையின் விற்பனையும் விலையும் பல மடங்கு அதிகரிக்கும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பூச்சந்தை இன்று கூடியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் விதவிதமான கலர் பூக்கள் தோவாளை பூ சந்தையில் வந்து குவிந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினத்தை விட பூக்கள் அனைத்தும் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. நேற்று 1300 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ இன்று 2000 ரூபாயாகவும், நேற்று 1500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 2500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் ரோஜா, செவ்வந்தி, அரளி, துளசி, தாமரை, கொழுந்து உள்ளிட்ட அனைத்து பூக்களும் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. இருந்தாலும் பண்டிகையை பொறுத்து பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால் மக்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்ல வருகை தந்துள்ளதால் தோவாளை பூச்சந்தை களை கட்டி உள்ளது.
செய்தியாளர் : சரவணன் - நாகர்கோவில்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanniyakumari, Local News, Pongal 2023