முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / செய்முறை தேர்வுக்கு கட்டணம் செலுத்த அழுத்தம்?- மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை!

செய்முறை தேர்வுக்கு கட்டணம் செலுத்த அழுத்தம்?- மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை!

தற்கொலை செய்துகொண்ட நர்சிங் மாணவி சுபிதா கிரேஸ்

தற்கொலை செய்துகொண்ட நர்சிங் மாணவி சுபிதா கிரேஸ்

கல்லூரியில் கட்டணம் செலுத்த கூறி ஆசிரியைகளின் அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரியில் செய்முறை தேர்விற்கு பணம் செலுத்த ஆசிரியைகள் கூறிய நிலையில்,  மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அந்தரபுரம் பகுதியை  சேர்ந்தவர் தேவதாஸ் இவரது மகள் சுபிதா கிரேஸ் வயது ( 21) இவர் திடல் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.

இந்த நிலையில் செய்முறை தேர்வு எழுத சுபிதா கிரேஸ்  கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கல்லூரியில் ஆசிரியைகள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளதாகவும், தொடர்ந்து கடந்த 15 நாட்களாக மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து கல்லூரிக்கு செல்லாத காரணத்தால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

Also Read: ஆம்னி பேருந்தில் ஏற முயன்றவர்கள் மீது மோதிய மணல் லாரி.. 6 பேர் உயிரிழந்த பரிதாபம்

இதனால் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த சுபிதா கிரேஸ் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், பெற்றோரிடம் விஷம் அருந்திய தகவலை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சுபிதா கிரேஸ் உயிரிழந்தார்.

கல்லூரியில் கட்டணம் செலுத்த கூறி ஆசிரியைகளின் அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் : சரவணன் ஐயப்பன்

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Kanniyakumari, Student Suicide