நாகர்கோவில் அருகே பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்ற டாடா சுமோ வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் உலகம்மாள் (54), அவரது மகளை தாழக்குடி அருகே திருமணம் செய்து கொடுத்துள்ள நிலையில், இன்று அவருக்கு தலைப்பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்றுள்ளார்.
இதற்காக திட்டுவிளை பகுதியை சேர்ந்த ஜெகன்(28) என்பவரது டாட்டா சுமோ வாகனத்தில் உறவினர்களுடன் தாழக்குடிக்கு சானல் சாலையோரமாக வரும் போது, திடீரென வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் உலகம்மாள் மற்றும் அவரது சகோதரி உமா(50) ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் டிரைவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு நேரில் வந்த பூதப்பாண்டி காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மகளுக்கு தலைப்பொங்கல் சீர்வரிசை கொண்டு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் தாய் மற்றும் உறவினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanniyakumari