கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அருகே பியூட்டிசியன் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான கணவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்
கொலைக்கு முன் எழுதிய 11-பக்க கடிதம் மற்றும் வீடியோவும் வெளியானது.
கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் ஆற்றின் கரையோர சாலையில் கடந்த வியாழக்கிழமை இரவு இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளயில் சடலமாக கிடப்பதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளம்பெண் மூலச்சல் பகுதியை சேர்ந்த 32- வயதான ஜெபபிரின்ஸா என்பது தெரியவந்தது.
இவர் 14வருடங்களுக்கு முன் அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் எபனேசர் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்பையும் மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது எபனேசர்-ஜெபபிரின்ஸா தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள பியூட்டி பார்லரில் கடந்த 4-மாதங்களாக பகுதி நேர ஊழியராக பணியாற்றியதோடு பீயூட்டிசியன் படிப்பும் படித்து வந்ததும் தெரியவந்தது.
Also Read: ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி... கவிஞர் தாமரை காட்டம்.. சிக்கலில் விஜி பழனிச்சாமி
தாய் வீட்டில் இருந்து இரவு கணவர் எபனேசர் உடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஜெபபிரின்ஸாவை மூலச்சல் ஆற்றின் கரையோரம் சாலையில் இறக்கி விட்டு கணவர் தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து தனது மகள் ஜெபபிரின்ஸா மார்டன் உடை அணிந்து பியூட்டி பார்லருக்கு சென்று வருவதால் கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவளது கணவர் எபனேசர் எங்கள் மகளை கொலை செய்துள்ளதாக தந்தை ஜெபசிங் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்தப்புகாரின் பேரில் எபனேசர் மீது கொலை வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் ஜெபபிரின்ஸா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய எபனேசர் போலீசார் தேடி வந்த நிலையில்
போலீசாருக்கு பயந்த எபனேசர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Also Read: கள்ளக்காதல் கொடூரம்... புருஷனை கொல்ல வீட்டுக்கு தீ வைத்த மனைவி.. 6 பேர் பலியான சோகம்..
இந்நிலையில் எபனேசரை போலீசாரால் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில் “என் மனைவி தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில் என்னுடைய அனுமதி பெறாமல் திருவனந்தபுரத்தில் உள்ள பியூட்டி பார்லருக்கு பீயூட்டிசியன் படிப்பிற்கு சென்று வந்தார். அங்கு சில ஆண் நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். தினமும் மேக்கப் டைட் ஜீன்ஸ், டீசர்ட் அணிந்து காலையில் செல்லும் அவர் ஆண் நண்பர்களுடன் பீச் பார்க் என டேட்டிங் செல்வதோடு இரவு வீடு திரும்பியுள்ளார்.
இரவு வீட்டிற்கு வந்த பின்பும் தனி அறையில் இருக்கும் அவர் தனது அந்தரங்க புகைப்படங்களை ஆண் நண்பர்களுக்கு பகிர்ந்து சாட்டிங் செய்து வந்தார். இதன் காரணமாக என்னை படுக்கை அறையில் அனுமதிப்பதில்லை. இதனால் சந்தேகமடைந்த நான் அவரது செல்போணை ரகசியமாகை எடுத்து பார்த்த போது
அதில் ஆண் நண்பர்களுடன் தனது மனைவி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
மனைவியை அழைத்து கண்டித்தும் ஆண் நண்பர்களுடனான தொடர்பை கைவிடாததால் அவமானம் அடைந்தேன். இந்த ஆத்திரத்தில் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு சென்ற இரவோடு இரவாக இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து பின் தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து எபனேசரை கைது செய்த போலீசார் அவரை தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
இந்த நிலையில் எபனேசர் மனைவியை கொலை செய்யும் முன் எழுதி வைத்த 11-பக்க கடிதம் அவர் வெளியிட்ட வீடியோ மனைவி ஜெபபிரின்ஸா ஆண் நண்பர்களுடன் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்த போட்டோக்களும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Illegal affair, Illegal relationship, Kanyakumari, WhatsApp