கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன இரு குழந்தைகளின் தாய், முன்னாள் காதலனுடன் ஆரல்வாய்மொழியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய சூசை நாதன் ( 35) , இவர் கடியப்பட்டணம் பகுதியில் வாடகை கார் ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள ஷாமினி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் முன்பு ஆரோக்கிய சூசைநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஷாமினியுடன் ஊரை விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதம் முன்பு ஷாமினியின் கணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு இருவரையும் போலீசார் மீட்டனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் ஷாமினி தனது இரு ஆண் குழந்தைகளுடன் மாயமாகியதாக மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி பகுதியில் தேவசகாயம் மவுண்ட் பகுதியில் உள்ள தேவாலயம் முன்பு டாட்டா சுமோ காரில் நேற்று இரவு வந்துள்ளனர். காரில் இரண்டு குழந்தைகளையும் தூங்க வைத்துவிட்டு, தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் விஷத்தை குடித்து இருவரும் தற்கொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி... கவிஞர் தாமரை காட்டம்.. சிக்கலில் விஜி பழனிச்சாமி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kanniyakumari, Local News, Tamil News