கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 13ஆம் தேதி 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அன்று அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ கற்றல் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இணைந்து, பள்ளிகளை ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களோடு மாணவராக ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தார். இது தொடர்பான படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பத்மநாபபுரம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் ராஜேஷ், அந்த படத்தை பகிர்ந்து, முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து ஆபாசமாக அவதூறு கருத்தை பதிவிட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணிஅமைப்பாளர் ஜெபா ஜாண் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், முதல்வர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட ராஜேஷ் மீது சமூக ஊடகத்தை தவறாக பயன்படுத்துதல், அவதூறு கருத்துக்களை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Must Read : வங்கதேச இளைஞருக்கு போலியான ஐடி கார்டு மூலம் இந்திய பாஸ்போர்ட்... செங்கல்பட்டில் இருவர் கைது
இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் ராஜேஸை போலீசார் தேடிவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Facebook, Kanyakumari, MK Stalin