முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / சிங்கப்பூர் கணவருடன் வீடியோ காலில் பேசியபோது சண்டை - இளம்பெண் தற்கொலை

சிங்கப்பூர் கணவருடன் வீடியோ காலில் பேசியபோது சண்டை - இளம்பெண் தற்கொலை

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Kanniyakumari District News: வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட தகராறு காரணமாக, கன்னியாகுமரி அருகே பஞ்சாயத்து ஊழியரான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஞானபாக்கியபாய் (வயது 33). இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

ஞானபாக்கியபாய் சிங்கப்பூரில் உள்ள தனது கணவர் செந்திலுடன் வாட்ஸ்அப் வீடியோகால் மூலம் பேசினார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ஞானபாக்கியபாய் தனது 2 குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு, வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்து அவரது கணவர் செந்தில், அருகில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் செந்திலின்வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது, ஞானபாக்கியபாய் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணவர் செந்திலுடன் ஞானபாக்கியபாய்

உடனே இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஞானபாக்கியபாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Must Read : ‘நானும் நீதிபதிதான்... தொலைச்சிப்புடுவேன்’ என போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய மின்வாரிய அதிகாரி

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு தற்கொலையில் முடிந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


top videos

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    First published:

    Tags: Hanged, Kanyakumari, Sucide