குமரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது...
குமரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது...
கஞ்சா விற்று கைதான 2 இளைஞர்கள்
Kanja selling kanniyakumari | கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை நித்திரவிளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஞானசிகாமணி தலைமையிலான போலீசார் கலிங்கராஜபுரம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பத்து ஏக்கர் எனும் பகுதியில் கேரள பதிவெண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்று நின்றுள்ளது. இதனை கண்ட போலீசார் அந்த பகுதியை சுற்றி சோதனை செய்த போது இரண்டு வாலிபர்கள் கையில் வெள்ளை நிற பொட்டலம் ஒன்றை வைத்து கொண்டு நின்றிருந்துள்ளனர்.
அவர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த ரதீஷ் 25 மற்றும் நிஷான் என தெரியவந்தது.
மேலும் அவர்கள் கைகளில் இருந்த பொட்டலத்தை பரிசோதனை செய்தபோது அதில் சுமார் 140 கிராம் மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது. இந்த கஞ்சாவை அந்த பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வந்திருந்ததும் தெரியவந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.