காஞ்சிபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கணவருடன் கஷ்டப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து வீடு ஒதுக்கீடு ஆணையை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறுதல் நிகழ்ச்சி தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி அன்று காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கோமதி தனது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் குடியிருப்பு ஒன்று வழங்குமாறு கோரிக்கை மனுவை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் அளித்தார்.
காஞ்சிபுரம்: ரியல் எஸ்டேட் வியாபார ஆசைக் காட்டி ரூ.1 கோடி மோசடி
இந்நிலையில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தால், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கதிர்பூரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடு ஒன்று வழங்குவதற்குக்கான ஒதுக்கீடு ஆணையை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார். 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த குடியிருப்பிற்கு பயனாளிகள் பங்களிப்பு தொகையாக ரூ.1.50 இலட்சம் கட்ட வேண்டும்.
ஆனால் மாற்றுத்திறனாளி கோமதியின் வறுமை நிலை கருதி இத்தொகையினை மாவட்ட நிர்வாகம் மூலம் பங்களிப்பு தொகை தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆணையைப் பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளி கோமதி அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News