தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் புத்தகங்களை வாசிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்த அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி "புத்தியை தீட்டுவோம்" என்ற வாசகத்தை முன்னிறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கு மைதானத்தில் கடந்த 23-ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.
புத்தகத் திருவிழாவில் 120-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து பல்வேறு புத்தக பதிப்பகத்தாரின் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாரம்பரிய உலகப் புகழ் பெற்ற பட்டு சேலை நெய்தலை இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் புத்தக திருவிழாவில் ஒரு அரங்கில் மத்திய நெசவாளர் சேவை மையம் சார்பில், பட்டு சேலை நெசவு செய்யும் கைத்தறி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைத்தறி கூடத்தில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை, நெசவாளர்கள் பட்டு சேலை நெசவு செய்யும் காட்சியை நேரடியாக காணும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
Read more: ஆசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் சாதித்த காஞ்சிபுரம் மாணவர்கள்
செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News