தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக சூறைக்காற்றுடன் தொடர் கன மழை பெய்தது.
இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த மரங்கள் உட்பட்ட 253 மேற்பட்ட மரங்கள் சாலைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சரிந்து விழுந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த நிலையில் அதனை பேரிடர் மீட்பு குழுவினர், மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்புத்துறை துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தற்காலிகமாக சாலை ஓரங்களில் அகற்றி வைத்தனர்.
இந்நிலையில், இன்று மழையானது முற்றிலுமாக நின்று வெயில் அடிக்க துவங்கி உள்ள நிலையில் சாலை ஓரங்களில் அகற்றி வைத்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வாகை மரம் சரிந்து விழுந்து சாலை ஓரத்தில் அகற்றி வைக்கப்பட்டுள்ள மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளை ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News