முகப்பு /செய்தி /kanchipuram / செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகலில் தண்ணீர் திறப்பு..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகலில் தண்ணீர் திறப்பு..!

செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு

சென்னையில் கடந்த 3 நாட்களாக விடிய விடிய பெய்து வரும் மழையால் நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai | Kancheepuram (Kanchipuram)

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகலில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும்  என  சென்னை  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக விடிய விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகள் என அனைத்தும் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்பொழுது 20.64 அடியில் நீர் உள்ளது. தற்போது 1ஆயிரத்து 180 மில்லியன் கன அடி நீர் வரத்து உள்ளதாலும் , ஒரே நாளில் 89 மில்லியன் கன அடி நீரானது உயர்ந்துள்ளதாலும்  இன்று மதியம் 3 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நூறு கன அடி நீர் வெளியேற்றப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க | சாலையில் தேங்கிய மழைநீர்... பாதாள சாக்கடை செல்லும் குழியில் விழுந்த பெண்.. பதைபதைக்கும் காட்சிகள்!

இதே போல 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2536 மில்லியன் கனஅடியாக உள்ளது புழல் ஏரியும் முழு கொள்ளளவை எட்டும் நிலை இருப்பதால் இன்று மதியம் 100 கன அடி திறக்க வுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருப்பதால் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

top videos

    தற்போது முதற்கட்டமாக 100 கன அடி நீரானது திறந்துவிடப்படவுள்ளது. நீரின் வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவானது படிப்படியாக உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: Chembarambakkam Lake, Chembaramkkam, Heavy rain, Weather News in Tamil