காஞ்சிபுரம் அருகே ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல பேரிடம் 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்ற நபர் பணத்தை திருப்பி தராமல் தப்பி ஓடியுள்ளார். பணத்தைக் கொடுத்து ஏமார்ந்தவர்கள் ஏமாற்றியவரின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதற்கு தேவையான முதலீடு பணத்தை சக பணியாளர்களிடமும், அவர்களின் உறவினர்களிடமிருந்தும் வாங்கியுள்ளார்.
முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தொழில் செய்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பணத்தை தராமல் ஜனார்த்தனன் இழுத்தடித்து வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தூசி காவல் நிலையத்தில் புகார் புகார் அளித்து உள்ளனர். இந்நிலையில் திடீரென ஜனார்த்தனன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
பட்டு சேலை தயாரிப்பதைப் பார்க்க வேண்டுமா.. காஞ்சி புத்தக திருவிழாவிற்கு அடிங்க ஒரு விசிட்
செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News