காஞ்சிபுரம் புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஜினிகாந்த் - லதா தம்பதியினர். ரஜினிகாந்த் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சாலபோகம் பகுதியில் புதிய வீடு கட்டி வருவதாகவும், தற்போது புத்தேரியில் வசித்து வரும் இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். அடுத்த இரண்டு மகள்கள் பள்ளி படிப்பை படித்து வந்துள்ளனர்.
ப்ளஸ் 1 படித்து வந்த இரண்டாவது மகள் தனிஷியா ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று வந்துள்ளார். ஆங்கில வகுப்பில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர் கண்டித்துள்ளார்.பள்ளி வரும்போது பெற்றோரை அழைத்து வர ஆசிரியர் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்தபோது , வகுப்பறையில் நடந்த விவரங்களை யாரிடமும் கூறாமல் படுக்கை அறையில் சோகமாக இருந்துள்ளார்.
மாலை 6.30 மணி அளவில் வீட்டின் படுக்கையறை கதவு உள்ளே மூடப்பட்டு இருந்ததால், அவரின் பெற்றோர்கள் அருகில் இருந்த உறவினர்களை கூப்பிட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தபோது , மருத்துவர் பரிசோதித்து உயிரிழந்ததாக கூறியுள்ளார்.இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் ஆய்வாளர் பேசில்பிரேம்ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைத்துள்ளார்.
பள்ளி மாணவி மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அறையில் சோதனை செய்ததில் , அவர் வழக்கமாக டைரி எழுதும் பழக்கம் உள்ளவர் என்பதும் , இன்று அதில், ஆங்கிலம் பேச , எழுத சரியாக வராததால் வகுப்பறையில் சக மாணவிகளின் முன்னிலையில் ஆங்கில ஆசிரியர் திட்டியதாகவும், ஆரம்பத்தில் இருந்து சரியான ஆங்கிலப் பள்ளியில் படித்திருந்தால் இதுபோன்ற நிலை எனக்கு ஏற்பட்டு இருக்காது எனவும், இதனால் ஐ நோ ஹேப்பி எனவும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அக்கா மற்றும் தங்கை நன்றாக படிப்பதால் அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என எழுதியுள்ளார். ஆங்கிலம் சரிவர எழுத படிக்க வரவில்லை என கடிதம் எழுதி மாணவி தூக்கிட்டு இறந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : சந்திரசேகர் (காஞ்சிபுரம்)
=================================================================
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
================================================================
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kancheepuram, Local News, Tamil News