கள்ளிக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணம் அடைந்த சம்பவத்தில் நீதி கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கல்வீச்சு நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீசார் சிலர் காயம் அடைந்ததனர். இதையடுத்து அவர்கள் தடியடி நடத்தினர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஸ்ரீமதி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்கள்: பிளஸ் டு மாணவி மரணத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை- மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல்
நான்காவது நாளாக இன்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்போது போலீசாரை நோக்கி சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.போலீசாரில் சிலர் காயமடைந்தனர் இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர். எனினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசாரும் பதிலுக்கு கல் வீசி தாக்க தொடங்கினர். போராட்டத்தை ஒடுக்க வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது. நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.