+2 மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த 12ம் தேதி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பள்ளி தரப்பில் கூறப்படுகிறது. எனினும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்
மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றையிட்டு பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறையில் முடிந்தது. பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பள்ளி பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனிடையே, மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை
இவர்கள் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஒருநாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், நீதிபதி புஷ்பராணி வீட்டில் ஆஜர்படுத்திய பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவர்கள் 5 பேரும் தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது நாளை விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.