பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் மூன்று மணிநேரத்தில் 4 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை பரபரப்பாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம்தோறும் புதன்கிழமையன்று வாரச் சந்தை நடப்பது வழக்கம். வழக்கமாக இந்த சந்தையில் 25 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெறும்.
இந்நிலையில் வரும் ஞயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆடுகள் விற்பனை
10,000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று மணி நேரத்தில் 4-கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Must Read : உஷார்... சென்னையில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
இன்று மதியம் வரை நடைபெற்றும் இந்த சந்தையில் வர்த்தகம் 5 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் - எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.