கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன
சேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளியின் 2வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. எனினும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர்.
மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து தனியார் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பள்ளி வாகனங்கள், மாணவ- மாணவியரின் சான்றிதழ் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 350 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: யாருக்கெல்லாம் மின் கட்டணம் உயர்வு... கூடுதலாக எவ்வளவு செலுத்த வேண்டும் - முழு தகவல்
இதனை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என உள்துறை செயலர் பணிந்திரரெட்டி மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் அறிவித்தனர். அதன்படி,
சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.