இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் கொழும்பூவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழலால் அங்குப் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய ஜவுளி தொழிலும் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள் வேறு வழியின்றி பாலியல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
காவலர்கள், வியாபாரிகள், படித்தவர்கள், மாபியா ஆட்கள் என அனைவருடனும் பாதுகாப்பின்றி பாலியல் உறவு வைத்துக்கொள்வதால், இவர்களின் நிலையும் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண், “இந்த நெருக்கடி நிலையால் எங்களுக்கு வேலை போகும் அபாயம் உள்ளது. இப்போது பாலியல் தொழிலைத் தவிர வேறு எந்த வழியும் எங்களுக்கு இல்லை. இதுவரை நாங்கள் மாதம் 28,000 ரூபாய் சம்பாதித்து வந்தோம். அதிக நேரம் வேலை பார்த்தாலும் 35,000 ரூபாய்க்கு மேல் எங்களால் சம்பாதிக்க முடியாது. ஆனால் பாலியல் தொழிலில் எங்களால் ஒரு நாளில் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது” எனப் பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து பாலியல் தொழிலாளர் முன்னணி அமைப்பின் வழக்கறிஞர் குழுவின் நிர்வாக இயக்குநர் அஷிலா தண்டெனியா “பெண்கள் அவர்களின் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும், உடன்பிறந்தவர்களுக்கும் கூட உதவி செய்ய முடியாத சூழல் தான் இங்கு இருக்கிறது. சீக்கிரம் பணம் சம்பாதிக்க அவர்களுக்கு இதை விட வேறு தொழில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஜவுளி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, பண வீக்கம், எரிபொருள் குறைபாடு, உணவு மற்றும் மருந்துகளின் தட்டுப்பாடு என இலங்கையின் நிலை மோசமாகி பெண்களை இந்த தொழிலுக்குத் தள்ளியுள்ளது.
மேலும் உணவு மற்றும் மருந்துகளின் தட்டுப்பாட்டால், அவர்கள் இந்த பொருட்களுக்காக உள்ளூர் வியாபாரிகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவும், இதற்குப் பாதுகாப்பு கொடுக்க காவல் அதிகாரிகளும் இவர்களை பாலியல் உறவில் ஈடுபட நிர்ப்பந்திக்கிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.