உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்தை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. மரியான் பயோடெக் என்ற மருந்து நிறுவனம், டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) என்ற இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. உஸ்பெகிஸ்தானில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக 21 குழந்தைகள் டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தை அருந்தியதாக கூறப்படுகிறது. இதில், 18 குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவரின் பரிந்துரை இன்றி அளவுக்கு அதிகமாக இருமல் மருந்தை சிறுவர்களுக்கு கொடுத்ததே, உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. அத்துடன், எத்திலீன் கிளைக்கால் என்ற ரசாயனம், டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தில் கலந்திருப்பதாகவும், இதுவும் குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானில் மரியான் பயோடெக் நிறுவனத்தின், டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child, Dead, UZBEKISTAN