ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு: தீர்ப்பு என்ன தெரியுமா?
ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு: தீர்ப்பு என்ன தெரியுமா?
டெரிக் சாவின்
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லபட்ட வழக்கில் முன்னாள் காவலர் டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தை சேர்ந்தவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அப்போது டெரிக் சாவின் என்ற காவலர் பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து அழுத்தினார். இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. இதனிடையே, ஜார்ஜ் பிளாய்டு குடும்பத்தினர் தரப்பில் மினசோட்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என்று நிரூபணமானது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் ஜார்ஜ் பிளாய்டுக்கு எதிராக அரங்கேற்றிய கொடூரத்தை கருதி இந்த தண்டனை அளிக்கப்படுவதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.