துருக்கி மற்றும் சிரிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 28,000 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலட்யா பகுதியில் நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் கடை வீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் சமூக விரோத கும்பல்கள், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கடைகளுக்குள் புகுந்து, கையில் கிடைத்த பொருட்களை அள்ளிச்செல்கின்றனர். செல்போன், ஹெட்போன்ஸ், சார்ஜர் என ஆளுக்கு இரண்டு பாக்ஸ்களை கையில் எடுத்துக்கொண்டு கடைக்கு கடை தங்களது சூறையாடலை தொடர்ந்து வருகின்றனர்.
கடைகள் மட்டுமின்றி வங்கிகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கடை வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் துருக்கி ராணுவத்தினர் துப்பாக்கிகளுடன் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Turkey Earthquake