துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் பிப்ரவரி 6ஆம் தேதி நிகழ்ந்த கோர நிலநடுக்கத்தால் இரு நாடுகளும் வரலாறு காணாத பாதிப்பை கண்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 33,000ஐ கடந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் மீட்பு பணிக்காக குழுக்களை அனுப்பியும், நிதி உள்ளிட்ட பல்வேறு வகையிலும் உதவிகளை செய்து வருகிறன. லட்சக்கணக்கான மக்கள், வீடுகள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி சாலைகள் வசிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்பு பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மறுபுறம் இடிந்து விழுந்த கட்டிடங்களில் கட்டுமானத்தில் ஊழல் நிகழ்ந்தாக எழுந்துள்ள புகார்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. புதிய கட்டுமானங்கள் பல மோசமான தரத்தில் கட்டப்படுகின்றன. நிலநடுக்கம் அதிர்வுகளை தாங்கும் திறன் இந்த கட்டடங்களுக்கு இல்லை என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. துருக்கி அரசு நிர்வாகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் ஊடுருவியுள்ளதாகவும் பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
துருக்கியின் அதிபராக எடோர்கான் 20 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் நிலையில், சில மாதங்களில் தேர்தல் வருகிறது. நிலநடுக்க பேரிடரால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரிகட்ட கட்டுமான ஒப்பந்ததார்கள் மீது அதிரடி நடவடிக்கையை துருக்கி அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 113 ஒப்பந்ததார்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது போன்ற மேலும் பல நடவடிக்கைகள் இனி வரும் நாள்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Turkey, Turkey Earthquake