கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து சீனா அளிக்கும் தகவலில் நம்பிக்கையில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. உலகிலுள்ள எட்டு நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் கொரோனாவில் மிகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,000-த்தை தாண்டியுள்ளது.
இந்தநிலையில், கொரோனா தொடங்கிய சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,500 என்ற அளவில் உள்ளது. இந்தநிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள், பாதித்தவர்களின் எண்ணிக்கையை சீனா குறைத்து காட்டுகிறது என்று அமெரிக்க குற்றம்சாட்டுகிறது.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ ஏற்கனவே சீனா அளித்த புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மையானது இல்லை, அதை வெள்ளை மாளிகை நிர்வாகிகள் நம்பவேண்டாம் எனத் தெரிவித்த நிலையில் தற்போது குடியரசுக்கட்சியின் முன்னாள் எம்.பி. நிக்கி ஹாலேவும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், ‘நாங்கள் பார்த்ததையும், எங்களுக்கு கிடைத்த தகவலையும் ஒப்பிடும்போது சீனா தரப்பில் கொரோனா குறித்து அளிக்கப்படும் தகவல் குறைவானதாகத் தோன்றுகிறது. அவர்களுடைய தகவல்கள் உண்மையா? இல்லையா? என்பது தெரியாது. நான் சீனாவின் கணக்காளர் கிடையாது’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.