பெல்ஜியத்தில் கெண்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த இரண்டாம் லியோபோல்ட் மன்னரின் சிலையை அகற்றக்கோரி ஏற்கனவே பலமுறை நடைபெற்ற போராட்டங்கள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் அமெரிக்காவில் நிகழ்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் காலனி ஆதிக்கவாதிகளின் சிலைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து பெல்ஜியத்தின் கெண்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த மன்னர் இரண்டாம் லியோபோல்ட் சிலையும் அகற்றப்பட்டது.
சிலையை அகற்றுவது பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வராது என்றாலும் இனவாதம், பாகுபாடு ஆகியவற்றின் அடையாளமாக இருந்த ஒருவரை கௌரவிப்பது முடிவுக்கு வருகிறது என கெண்ட் நகர மேயர் மத்தியாஸ் டெக்லெர்க் (Mathias DeClercq) கூறினார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.