ஏதேன்சில் இருந்து தெஸ்ஸாலொனிகி (thessaloniki) நகருக்கு 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. லரிசா (Larissa ) அருகே தெம்பி ( Tempi) என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
2 ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில், பயணிகள் சென்ற ரயிலில் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 150 க்கும் அதிகமான வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read : ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர் சுட்டுக்கொலை.. காரணம் என்ன?
விபத்துகுள்ளான ரயில் ஹெலனிக் என்ற தனியார் நிறுவனம் இயக்கியது என்பது தெரியவந்துள்ளது. இதில் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வேண்டுமென்றே விபத்து நிகழ்த்தப்பட்டதா உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சந்தேக்கின்றனர். ரயில்வே அதிகாரிகளின் அலட்சியமே விபத்திற்கு காரணம் என்று கூறி ஏராளமானோர் பேரணியாகவும் சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Train Accident