தொலைபேசி அழைப்புக்கு பதில் தராததால் தனது நாட்டுக்கான ஆஸ்திரிய தூதரை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திரும்பப்பெற்றார்.
இலங்கைக்கான ஆஸ்திரிய நாட்டின் தூதர் பிரியானீ விஜிசேகரா. இவர் பணிசெய்யும் தூதரகம் ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் அமைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆஸ்திரிய தூதரகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். எனினும், யாருமே பதிலளிக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் பிரியானீ விஜிசேகராவும், தூதரக அதிகாரிகள் 5 பேரும் இலங்கைக்கு திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டனர்.
இதுதொடர்பாக, இலங்கை அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆஸ்திரிய தூதரகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது யாருமே பதிலளிக்கவில்லை. தொடர்ந்து அவர் பலமுறை தொடர்புகொள்ள முயன்றபோதும், இதே நிலை நீடித்துள்ளது.
இதையடுத்து, இலங்கைக்கான ஆஸ்திரிய தூதரும், தூதரக அதிகாரிகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளனர் என்றார் அவர். எனினும், மைத்ரிபால சிறிசேனா ஆஸ்திரிய தூதரகத்தை தொலைபேசியில் எதற்காக அவசரமாக தொடர்புகொண்டார்? வெளியுறவு அமைச்சகத்தின் வாயிலாக தூதரகத்தை தொடர்புகொள்ள அவர் ஏன் முயற்சி செய்யவில்லை? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அந்த அதிகாரி மறுத்துவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Austria embassy, Maithripala Sirisena, Phone call, Priyanee Wijesekera, Sri Lanka President