முகப்பு /செய்தி /உலகம் / 3 மாதத்தில் 5000 பேர்.. அர்ஜெண்டினாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்.. காரணம் இதுதான்!

3 மாதத்தில் 5000 பேர்.. அர்ஜெண்டினாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்.. காரணம் இதுதான்!

கோப்பு படம்

கோப்பு படம்

கடந்த 3 மாதங்களில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜெண்டினா வந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaArgentinaArgentina

ஒரு நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு அந்தந்த நாடுகளின் சட்டப்படி பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதே போல் அர்ஜெண்டினாவில் கடைபபிடிக்கப்படும் நடைமுறைகளில் ஒன்று அந்நாட்டில் யாராவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கி விடுகிறது. இதை யார் பயன்படுத்திக் கொள்கிறார்களோ இல்லையோ, ரஷ்யாவைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரஷ்ய கர்ப்பிணிப் பெண்கள் அர்ஜெண்டினாவில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் என விசா பெற்றுக்கொண்டு அங்கு செல்லும் நிறைமாத கர்ப்பிணிகள் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்களாம். இது அர்ஜெண்டினா நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.

அர்­ஜெண்­டி­னா­வில் குழந்தை பெற்­றுக்­கொள்­ள­வ­தன் மூலம் அந்­நாட்டு பாஸ்போர்ட்டை பெற முடி­யும் என்­ப­தற்­காக அவர்­கள் அங்­கு செல்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதையடுத்து இது போன்ற நுழைவுகளை கண்காணிக்கவும் தடுக்கவும் அந்நாட்டு குடியுரிமை துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வாரம் அர்­ஜெண்­டி­னா­விற்­குள் நுழைய முயன்ற 6 ர‌ஷ்ய கர்ப்­பிணிகளுக்கு அனு­மதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்­று­லாப் பய­ணி­கள் என்று அவர்­கள் பொய் கூறி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அவர்­களில் சிலர், அனு­மதி மறுக்­கப்­பட்­டதை எதிர்த்து வழக்­குத் தொடுத்­துள்­ள­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த வழக்கில் ஆறு பெண்களும் அர்ஜெண்டினாவிற்குள் நுழைய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை என்றும் அவர்களின் சுதந்திரம் சட்டவிரோதமாக பறிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்கிறார் அந்நாட்டு தேசிய குடியுரிமை இயக்குநர் ஃபுளாரன்சியோ க்ளாரிக்நானோ. ஒவ்­வொரு நாளும் இந்த எண்­ணிக்கை அதி­க­ரித்துக் கொண்டே வரு­கிறது. நேற்று மட்­டும் ஒரே விமா­னத்­தில் 33 ர‌ஷ்ய கர்ப்­பிணி­கள் வந்­ததுள்ளனர் எனக் கவலையோடு தெரிவிக்கிறார் அதிகாரி ஒருவர். சென்ற ஆண்டு, 21,757 ர‌ஷ்­யர்­கள் அர்­ஜெண்­டி­னா­விற்­குள் நுழைந்­துள்­ள­தா­க­வும் அவர்­களில் கிட்­டத்­தட்ட 10,500 பேர் கர்ப்­பி­ணி­கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்­க­ளாக இது போன்ற வருகை அதி­க­ரித்­துள்­ளது. சென்ற மூன்று மாதத்­தில் 5,819 கர்ப்­பி­ணி­கள் அர்­ஜெண்­டி­னா­விற்குள் வந்­துள்­ள­னர் என கூறுகிறார் அர்­ஜெண்­டினா அதி­காரி ஒரு­வர்.

அர்­ஜெண்­டி­னா­வில் பிறக்­கும் குழந்­தை­க­ளுக்கு உட­ன­டி­யாக அர்­ஜெண்­டினா குடி­யு­ரிமை கிடைப்­ப­தோடு, அவர்­கள் மூலம் பெற்­றோ­ரும் அந்­நாட்டு குடி­யு­ரிமை பெறு­வ­தற்­கான வாய்ப்பு உள்­ளது. இதனால் அர்ஜெண்டினாவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் நபர்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கோடு இது போன்ற நுழைவுகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

First published:

Tags: Argentina, Citizen, Pregnant, Russia - Ukraine