உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வர்த்தக ரீதியில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பயன்படுத்தி ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
முன்பு வெளியிடப்பட்டிருந்த அறிவிக்கையில், அமெரிக்கர்கள் யாரும் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, மிக அவசர பணிகளை தவிர்த்து மற்ற பணியாளர்கள் அனைவரும் அமெரிக்க தூதரகத்திலிருந்து வெளியேறி நாடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தனர்.
இதையும் படிங்க -
ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் உயிரிழந்தோர் எத்தனை பேர்? ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டின் மீது சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 27 நாடுகள் ரஷ்ய விமானம் பறப்பதற்கு தடை விதித்திருக்கின்றன.
ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டில் இன்று தொடங்கியுள்ளது. இதில் போர் நிறுத்தத்தை உடனடியாக ரஷ்யா அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டது இந்திய தூதரகம்
இந்த சூழலில் தற்போது, ரஷ்யா கார்கிவ் நகரில் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் ரஷ்யாவின் இவ்வாறான நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நடத்திய தாக்குதலில் 4,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதனை ரஷ்யா உறுதி செய்யவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.