ரஷ்யாவில் கொரோனோ தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளாக மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதிகள் காணப்படுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை , டெல்டா வகை வைரஸ் தாக்குதல் ரஷ்யாவில் அதிகரித்துள்ளது.
ரஷ்ய அரசின் தரவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோவில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 600 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். புதிதாக 21650 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாஸ்கோவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவில் நிலைமை மோசமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைகள் மக்களால் நிரம்பி வழிகின்றன. வணிக நிறுவனங்களில் பணியாற்று தடுப்பூசி போடாத ஊழியர்களில் 30 சதவித நபர்களை வீட்டுக்கு அனுப்புமாறு மேயர் உத்தரவிட்டுள்ளார்.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரக்தில் யூரோ கால்பந்து போட்டி நடந்தது. அங்கு இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளது. காலிறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது. தற்போது அங்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.