இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 4-வது சுற்று வாக்கு நேற்று நடைபெற்றது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் உள்ளிட்ட 4 பேர் களத்தில் இருந்தனர். இதில், 118 வாக்குகளைப் பெற்று ரிஷி சுனக் முதலிடம் பிடித்தார். மேலும், மோர்டான்ட் 92 வாக்குகளையும், டிரஸ் 86 வாக்குகளையும் பெற்றனர். 59 வாக்குகளை மட்டுமே பெற்ற கெமி வெளியேறினார்.
கடைசி இரண்டு வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக இன்று மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் தேர்தலில் கட்சியின் ஒரு லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களித்து பிரதமரை தேர்வு செய்வார்கள். இதில், ரிஷி சுனக்-குக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.