ஜோ பைடன் மற்றும் டிரம்ப் இடையிலான கடைசி விவாதம் நிறைவடைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், விவாதம் வெற்றிகரமாக இருந்ததாகத் தெரிவித்தார். முதல் விவாதத்தின்போது பைடனுடன் காரசாரமாக மோதிய நிலையில், இரண்டாவது விவாதம் அமைதியாக நடைபெற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டிரம்ப் இரண்டும் வெவ்வேறு பாணி என்றும், தன்னால் வெவ்வேறு பாணிகளை கையாள முடியும் என்றும் கூறினார். இரண்டாவது விவாதத்தில் தான் விதிகளைப் பின்பற்றி நடந்து கொண்டதாகத் தெரிவித்த டிரம்ப், முதல் விவாதம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும், ஆனால் இரண்டாவது விவாதம் தான் சிறந்தது என்றும் கூறினார்.
தேர்தலில் வெற்றி உறுதி என்று நம்பிக்கை தெரிவித்த டிரம்ப். தங்களது கட்சியின் நிறத்தை குறிக்கும் வகையில் அமெரிக்காவில் விரைவில் சிவப்பு அலை அடிக்கும் என கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.