இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான பிரமிளா ஜெயபால் பிரதிநிதிகள் சபைக்கு தொடர்ச்சியாக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் பிறந்தவரான பிரமிளா ஜெயபால் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர், இவர் குடியரசுக் கட்சியின் கிரெய்க் கெல்லர் என்பவரை விட அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார். அமெரிக்க காங்கிரஸில் மிகவும் முற்போக்காளராக பார்க்கப்படும் இவர், இந்தியாவில் சிஏஏ சட்டம் மற்றும் காஷ்மீரின் மீதான இந்திய நிலைப்பாடுகள் பலவற்றை எதிர்ப்பவராவார்.
2016-இல் முதல்முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அமெரிக்கர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Gunavathy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.